இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதன் சக்தியை நாம் பெற முடியும். மேலும் வேறு எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி1, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், இரும்புச் சத்து, ஜிங்க், மாங்கனீஸ், மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், மிகுதியான நார்ச்சத்தும் சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. இந்த அரிசியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால், இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. மேலும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன. இவற்றைவிட, சிவப்பு அரிசியில் ‘மானோகோலின் கே’ என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்க உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.